ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

கண்ணீர் அஞ்சலி!திருமதி,யோகேஸ்வரி கந்தலிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் அமரர்களான திரு,திருமதி கந்தையா கண்ணம்மா மண இனையரின் புதல்வியும் அமரர்களான திரு,திருமதி வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் மருமகளும் திரு,வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும் விஜயறூபன்,காந்தறூபன் சிவறூபன் காலஞ்சென்ற கேமா ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆகிய திருமதி யோகேஸ்வரி கந்தலிங்கம் அவர்கள் இன்று(19.08.2021) காலமானார் எனும் செய்தி பேரிடியாய் விழுந்தது,யோகேஸ் அக்காவின் இழப்பால் துயருறும் அவர்தம் கணவர்,பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னார்தம் ஆத்மா இறையடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!யோகேஸ் அக்கா உங்களை என்றும் மறவோம்,தொலைபேசி மூலமாவது உங்கள் அன்பான பேச்சைக் கேட்டு வந்தோம் இப்போ அந்தப்பேச்சும் ஓய்ந்து விட்டதே என்று எண்ணும் போது கண்ணீரை தவிர வேறெதுவும் எமக்கு தோன்றவில்லை,உங்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள் யோகேஸ் அக்கா!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக