ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

கண்ணீர் அஞ்சலி!திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாகவும் வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றைய தினம்(20.08.2021) காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலை கொண்டு நிற்கின்றோம்!அன்னார் அமரர் திரு,ஆறுமுகம் வேலாயுதபிள்ளை[வேலாயுதபிள்ளை மனேச்சர்]அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும்,காலஞ்சென்ற ரஞ்சனாதேவி[ஆசிரியை-லண்டன்]மற்றும் சிறிமுருகன்,காலஞ்சென்ற ஜெயசீலன்[சுவிஸ்]ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,குணராசா,ராகினி,ரஜிகலா ஆகியோரின் மாமியாரும்,ஜதீசன்,யனுசா,மதுமிதா,நவீனா,நர்மதா ஆகியோரின் பாசத்திற்குரிய பாட்டியுமாவார்,அன்னைதம் பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னைக்கு எம் அஞ்சலிகளையும் காணிக்கை ஆக்குகின்றோம்!அன்னைதம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக