செவ்வாய், ஆகஸ்ட் 09, 2022

மரண அறிவித்தல்!திருமதி நகுலாம்பிகை செல்வரத்தினம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டிருந்த திருமதி,நகுலாம்பிகை செல்வரெத்தினம்[பிள்ளையம்மா]அவர்கள், 08.08.2022 திங்கட்கிழமை காலமானார்,அன்னார் அமரரான திரு,ஆறுமுகம் செல்வரெத்தினத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் அமரர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் புதல்வியும்,ஆறுமுகம் தங்கம்மா மண இணையரின் மருமகளும், உதயன்,சின்னத்தம்பி,ராசன்,யசோ,வனி 
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்றவர்களான அன்னபூரணம்,
சோமசுந்தரம்(கார்த்தி) குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா) சொர்ணம்மா[சொர்ணம்] கோணேஸ்வரி(கிளி)மற்றும் தேவராணி(ராணி)
தர்மராணி[சந்திரா] கந்தலிங்கம், சிவநாதன்,
செல்வநாயகி(செல்வம்) ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.08.2022 செவ்வாய்க்கிழமை  புளியங்கூடல் சுருவில் இந்து பொது 
மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் 
குடும்பத்தார்களுக்கு எமது 
ஆறுதல்களை தெரிவிப்பதுடன் 
அன்னைக்கு எமது கண்ணீர் 
அஞ்சலிகளையும் செலுத்தி 
அன்னார்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் 
அமைதிபெற 
எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக