சனி, செப்டம்பர் 11, 2010

அன்பானவளிடம் இருந்து அழைப்பு!


Hollo!யார் பேசுறீங்க?
என்ன குரல் மறந்துபோச்சா?
கேட்ட குரல் மாதிரி இருக்கு ஆனா ஞாபகம் வரல்லை.
நான் அருளி பேசுறேன்,எப்படி இருக்கிறீங்க?
அடடா நீங்களா?பரவாயில்லையே சுகம் எல்லாம் விசாரிக்கிறீங்க.
என்ன கோபம் போல இருக்கு?
இல்லை,இல்லை கோபம் ஏன் வரப்போகுது?கோவிச்சுத்தான்
என்னாகப்போகுது?
உங்கட காதல் விளையாட்டுக்கு ஒருத்தன்,கல்யாணம் பண்ண ஒருத்தன்!
நீங்க புரிஞ்சுக்கவே மாட்டீங்களா?விதி அப்படியாப்போச்சு!
செய்யிறதையும் செஞ்சிட்டு விதிமேல பழியை போட்டுருவீங்களே!
ஓகே,ஓகே,நான் செய்தது பிழைதான் அதுக்கு மன்னிப்பே கிடையாதா?
ஐயையோ!நீங்க ஏன் மன்னிப்பு கேக்கணும் நான் எல்லோ உங்களை
நம்பி தொலைச்சிட்டன்,ஒரு பெண்ணின் மனசை கஷ்ரப்படுத்தக் கூடாது
என்று நினைச்சன்,ஆனா நீங்க துரோ.......சீசீசீ அதை ஏன் இப்ப!
சரிடா!உங்களை மறந்தா இப்ப போன் பண்ணுவனா?ஏதோ நாங்க நினைச்சது
நடக்காமல் போச்சு இனி போனிலையாவது இணைஞ்சிருப்போமே!
இது கதைக்கு வேணுமென்றா நல்லா இருக்கும்,வாழ்க்கைக்கு சரிவராது,
உங்களை நம்மி வந்து தாலிகட்டியிருக்கிறானே ஒருத்தன் அவன்ர மனசை
கஷ்ரப்படாமல் பார்த்துக்கோங்க அதுவே போதும்.
அவரை நல்லபடியாத்தான் பார்த்துக்கிறேன்,அதில ஒரு குறைச்சலும் இல்லை.
அதுவே போதும்,நீங்க என்னை பிரிஞ்சது கவலையானாலும் சந்தோஷமா இருக்கிறீங்களே
என்றாவது நான் நிம்மதியாய் இருப்பேன்.
அதுசரி இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க?
ஆங்..இப்ப சும்மா என்ர வாயை கிளராதீங்க!
சரி,சரி இப்ப அவர் வரும் நேரமாச்சு,நான் பிறகு போன் பண்ணுறன்
நல்லா சாப்பிட்டு,உடம்பை கவனியுங்க!
கவனிச்ச உடம்பு இப்ப கிடைக்காம போச்சே!
ஏய்!இந்த லொள்ளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
சரி,சரி உன் கணவர் வந்திருவேர் ரெடியாகு!
ஆகா,உங்கட இந்தப்பேச்சாலே தானே என் மனசை தந்தேன்,
இப்ப கூட என் மனசு உங்களிட்டத்தானே இருக்கு.
இருந்துதான் என்னை கூறுபோடுது.சும்மா போடி!
நான் இப்ப போனை வைக்கிறன் இரவு 12மணிக்கு அடிக்கிறன் ஓகே.
ஓகே,ஓகே bye.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக