சனி, செப்டம்பர் 25, 2010

பாவலர் சத்தியசீலன்.

பாவலர் சத்தியசீலன் அவர்களுடன் ஒருசில மாதங்களே பழகி
இருந்தாலும்,அந்த நாட்கள் அத்தனையும் விலைமதிக்க முடியாத
நாட்கள் என்றே கூறலாம்.அவரது பேச்சிலே எப்பொழுதும்
கவிநயம் தவழ்வதை காணமுடியும்,நகைச்சுவை ததும்ப அவர்
பேசும் பேச்சு இவை எல்லாம் மனக்கண் முன் அப்படியே இன்னும்
நினைவில் நிழலாடுகின்றது.
ஒரு அற்புதமான மனிதரை நாம் இழந்து ஆண்டுகள் சில கழிந்து
விட்டபோதும் அவரின் பிரிவை நான் அறிந்திருக்கவில்லை,இப்போ
தற்செயலாக அல்லைப்பிட்டி இணையத்தை பார்த்தபோது நான்
அதிர்ந்தே விட்டேன்,
எனது(ஆட்டோ கிராப்)ஞாபகப்பதிவேட்டில் அவரது பதிவையும் இடுமாறு
நான் சொன்னபோது அவர் எழுதிய வார்த்தைகள்"ஞாயிறு வேந்தன் உந்தன்
நற்றமிழ் வெல்க"என்ற வாசகம் என்மனவேட்டிலும் பதிந்து விட்ட ஒன்று.
நான் புதுக்கவிதை எழுதும் ஒரு சாதாரணமானவன்.ஆனால் பெயர் வாங்கும்
அளவிற்கு எதையும் செய்தவன் இல்லை,இருந்தாலும் பாவலர் சத்திய சீலன்
அவர்கள் என்னை கவிஞர் என்றே அழைப்பார்,பெருமை இல்லாதவர்
அதனால் தானோ என்னவோ யாழ்,புத்திசாலிகள் அவரை பெருமைப்படுத்த
தவறி விட்டார்கள்,
நான் அவருக்கு மகன் மாதிரி இருந்தபோதும் அதையெல்லாம் விட்டு
தனது பள்ளிப்பருவ காதல் கதைகளையெல்லாம் மிகவும் நகைச்சுவையாக
சொல்லிய விதம்,நாங்கள் சிரித்த சிரிப்புக்கள் இன்னும் மனக்கண் முன்னே
நீண்டு விரிந்துகொண்டு செல்கிறது.
அவரை தனியாக காண்பதிலும் காரைநகர் மதுரகவி எம்,பி,அருளானந்தம்
அவர்களுடன் காண்பதே அதிகம்,அந்தளவிற்கு இருவரும் ஒற்றுமையுடன்
விளங்கினார்கள்.
பாவலர் சத்தியசீலன் அவர்கள் என் மனதுள்ளவரை நினைவில் மறையாமல் வாழ்வார்.

1 கருத்து: