ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

மனதோடு நிற்பவள்!

நம் வாழ்வில் பல புது முகங்கள் அறிமுகமாகிறார்கள்,
அதில் சிலர் எம் அகம் புகுந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்,
அப்படி என் அகம் எங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருவர்தான் சுபோ என்கிற சுபோஜினி!
மிகவும் அழகானவர்,அவரது அழகுக்கு ஏற்றாற்போல்
மனதும் அழகானதுதான்.நான் துயரில் வாடிய ஒரு காலம்,
அந்த நேரத்தில் எனக்கு நண்பியாய் அறிமுகமானவர்தான் சுபோ.
நாங்கள் பழகிய நாட்கள் மிகவும் பொன்னான நாட்கள் என்றே
கூறலாம்,அப்படி ஒரு மகிழ்வை தந்த நாட்கள் அவை.
கொழும்பு மேபில்ட் வீதியில் சுபோ வசித்து வந்தார்.
அவவினுடைய பேச்சு,தன்னடக்கம் எல்லாமே எனக்கு
பிடித்திருந்தது.என்னை புது மனிதனாக மாற்றிய அந்தப்
பேதைக்கு நான் என்றுமே நன்றிக்கடன் உடையவன்.
நாம் வேலை பார்த்த தினக்குரல் அச்சகத்தில் எம் தேசியத்தலைவர்
அவர்களின் பிறந்த நாளுக்கு நான் எல்லோருக்கும் ரொபி
கொடுத்தபோது எதற்கு ரொபியென அங்குள்ளவர்கள்
கேட்டபோது சட்டென இன்று அவருடைய பிறந்த நாள் என்று
சொல்லி சமாளித்த விதம் இன்றும் என் மனதில் அப்படியே
நிற்கிறது.எனது பிறந்த நாள் அன்று சுபோவின் பரீட்சை
பெறு பேறுகள் கிடைத்திருப்பதாக கூறி கேக் கொடுத்தபோது
நான் வேண்டுமென்றே என்ன விஷேசம் சுபோ எனக்கேட்க
அதற்கு,ரிஷல்ட் வந்திருக்காம் என்று மனேச்சர் சொல்ல
என்னை கடைக்கண்களால் சுபோ முறைத்ததும் இன்றும்
பசுமையாய் என் மனதின் உள்ளே மிதக்கிறது.
சிங்கள மொழிபேசும் பெண்ணான ஷாலிகா என்னுடன்
அன்பாகப் பழகும் ஒருவர்,நானும் சுபோவும் அதிகம்
பேசிக்கொள்வதால்,ஷாலிகாவுடன் பேசுவது குறைவாகவே
இருந்தது.இதனால் அடிக்கடி உங்களுக்கு இப்ப லெவல்
என்னோட கதைப்பதே இல்லை என்று ஷாலிகா கூறுவார்.
ஆனாலும் நாங்கள் மூவரும் சுபோ வீட்டில் சந்தித்து பேசுவோம்.
இன்று இவர்களுடைய தொடர்புகள் அற்ற நிலையிலும்
மனம் அவர்களை சுமந்தே வாழ்கிறது.
மீண்டும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக