சனி, அக்டோபர் 01, 2011

நீ வீழவில்லை அண்ணா என் மனதில் வாழ்கிறாய்!

ஓ.....மரணம் வாசல்தேடி வருமுன்னே
மரணத்தின் வாசல் கதவை தட்டியவனே!
அண்ணணே.....................
என் வாழ்விற்கு ஒளியூட்டிய வழிகாட்டியே!
வாடாமலர் போல வாழ்ந்து புகழ் எடுக்க
போடா தம்பியென்று புயம் கொடுத்து தூக்கியவனே!
அந்த நாள் ஞாபகத்தை அடிமனதில் சுமந்து கொண்டு
வெந்தணலில் வீழ்ந்து விட்ட புழுவாகி துடிக்கின்றேன்!
மூத்தவனாய் குடும்பத்தை முன்னின்று காத்தவன் நீ!
நோய்கள்,துன்பங்கள் பாடாய் படுத்தியபோதெல்லாம்
பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுந்தவன் நீ!
அரச பதவியில் அறுபதுகளில் இணைந்து கொண்டு
குடும்ப விளக்கை குன்றின்மேல் ஏற்றியவன் நீ!
ஒடுக்கு முறைகளை ஒதுக்கி புறம்தள்ளி
மிடுக்காய் நடந்து எம்மை மேன்நிலை படுத்தியவன் நீ!
பணந்தான் உலகென்று பதறியடிக்கும் உறவுக்குள்ளே
குணந்தான் பெரிதென்று குரல் கொடுத்த குணாளன் நீ!
எப்படியும் வாழலாம் என்பதை விடுத்திங்கு
இப்படித்தான் வாழவேண்டுமென வீறாப்பு கொண்டவன் நீ!
என் ஆருயிர் அண்ணாவே...................!!!
நெஞ்சில் ஈரம் இருந்தும் கடைசிவரை அழுதுவிட
என் கண்களில் ஈரமில்லையே.......
நீ வீழ்ந்தாய் என்றாலும்,
இறுதிவரை என் நெஞ்சில் வாழ்வாய் நான் வீழும்வரை.
(திரு.வீரகத்தி நாகமுத்து அவர்களின் மறைவையொட்டி,அவரின் நினைவாக இது பிரசுரமாகிறது)
ஆக்கம்:(சகோதரர்)வீ.குமரன் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக