ஞாயிறு, அக்டோபர் 09, 2011

நினைவுகளை நிலைக்க வைத்தவர்!

என்றும் மறக்க முடியாத பல நன்மைகள் புரிந்து மக்கள் மனதில் நினைவுகளை நிலைக்க வைத்தவர்கள் பலர்,அந்த பலரில் ஒருவராக எம் மனதில் நிலைத்து விட்டவர் என்.ஆர்.என யாவராலும் அறியப்பட்ட திரு, நாகலிங்கம் இரத்தினம் அவர்கள்!புளியங்கூடல் ஸ்ரீ மகாமாரி அம்பாள் மீது தீராத பக்திகொண்டு சேவை புரிந்தவர்.நல்ல பண்பும் இரக்ககுணமும் கொண்டவர்.உதவி என்று வருவோர்க்கு முடிந்தளவு உதவிகளை செய்ய பின்னிற்காத மனிதர் அவர்.புளியங்கூடல் வேலணை என்ற கிராமங்களை இணைக்கும் பாலமாக விளங்குகிறது அவரது இல்லம்.அவர் நம்மிடையே இன்று இல்லை என்று நினைக்க தோன்றவில்லை! அவரது பண்புகள் அவரை நிலைக்க வைத்திருக்கிறது என்பதே உண்மை!உலகுள்ளவரை அவரது நினைவுகளும் வாழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக