ஞாயிறு, அக்டோபர் 30, 2011

இதயம் கனக்க அஞ்சலிக்கின்றோம்!

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தியாகராசா இராசலட்சுமி அவர்கள் 28-10-2011 அன்று (வெள்ளிக்கிழமை)காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.மிகுந்த பரிவும் இரக்க சுபாவமும் கொண்டவரான தாயார் எல்லோருக்கும் உதவும் பண்புடையவர் மட்டுமன்றி,தனது இல்லம் நாடி வருபவர்களை அனுசரித்து உபசரித்து அனுப்பும் பாங்கு கொண்டவர்.தீவகத்திலே வேலணை,புங்குடுதீவு ஆகிய பகுதிகளில் வெதுப்பகங்கள் நடாத்தி மக்கள் பசி போக்கியவர்.உரிமையுடன் வந்து அறிவுரை சொல்லி ஆறுதல் வார்த்தைகளால் மனம் மகிழ செய்பவர்.இந்த தாயாரின் இழப்பால் வாடி நிற்கும் அதே வேளை அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களை தெரிவித்து, அவரது புனித ஆத்மா இறையடி நிழலில் அமைதி பெற வேண்டி அஞ்சலிக்கின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக