எங்குதான் சென்றீர்கள் எமைப் பிரிந்து?
ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் வாழ்ந்திருந்தோம் சித்தப்பா!
காலம் எமை பிரித்தது
வெளிநாடு எனும் தொலை நாட்டில்
நீங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்,
என்றாலும் தொலைபேசி வழிவந்து பேசி வந்தோம் சித்தப்பா!
இப்போ இன்னும் நெடுந்தூரம்
எமை மறந்து சென்றதேனோ சித்தப்பா?
என்று இனி காண்போம்?எப்படித்தான் பேசிடுவோம்?
ஆறாத துயர் கொண்டு வாடுகிறோம் சித்தப்பா!
உறவுகள் எல்லோரும் இங்கு நாதியற்று தவிக்கின்றோம்!
கண்ணீர் பூச்சொரிந்து மாலைகளை கோர்க்கின்றோம்!
உங்கள் உடலுக்கு எம் பலகோடி அஞ்சலிகள் சித்தப்பா!
(பெறா மக்கள் புளியங்கூடல் தெற்கு)
தகவல்:அருள் ஞானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக