திங்கள், ஜூலை 09, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன் அவர்கள்(08.07.2018)நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் மனமுடைந்து நிற்கின்றோம்.சிறந்த பண்போடு வாழ்ந்தவர்கள்,எல்லாப் பிள்ளைகளையும் தமது பிள்ளைகள்போல் அன்போடு அரவணைக்கும் தாயாக விளங்கியவர்கள்,அப்பு என்று அழைக்கும் அந்த குரலோசை இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இந்த பாசத்தாயது இழப்புச் செய்தி பொய்யாக இருக்காதோ என மனம் தவிக்கிறது.அன்னையின் இழப்பால் துடித்திருக்கும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக்  கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜூலை 03, 2018

மரண அறிவித்தல்!திரு கதிரவேலு தர்மராஜா[மகேந்திரன்-புளியங்கூடல்]

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா கதிரவேலு அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கயேந்திரன், கயரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண் கதிரவேலு(கனடா), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணகாந்தி, கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவநீதன் , சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு, இரகுபதி(இலங்கை), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

பவளராணி(இலங்கை), கோமதியம்மாள்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), குலேந்திரன்(கனடா), லோகநாதன்(டென்மார்க்), விஜயராஜா(சுவிஸ்), விஜயரெட்ணம்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலன், நிவேன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 07/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
சண்முகராஜா(சண்- சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168760923
கயேந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +19057817041
கயரூபன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165259997
செல்வநாயகி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94212226763
கமலாதேவி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94242227082
குலேந்திரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +19057034408
இராஜேஸ்வரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19059132184

அன்னாரது  குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை  தெரிவிப்பதுடன் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகளையும் புளியங்கூடல்.கொம் குழுமம் காணிக்கையாக்குகிறது.

புதன், ஜூன் 06, 2018

மரண அறிவித்தல்!திருமதி மனோன்மணி கந்தையா(புளியங்கூடல்)

தாய்மடி:21.10.1940 இறையடி:05.06.2018
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தையா அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், சிவநேசன், சிவமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திலகவதி(வவா), சரஸ்வதி(தேவி), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தயாபரி, பத்மநாதன்(ஆசிரியர் புனித சார்ல்ஸ் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிருத்தன், சுரபி, விதுஷா(சித்த மருத்துவபீட மாணவி- கிழக்கு பல்கலைக்கழகம்), துஷாபன்(தொழில்நுட்பபீட மாணவன்- மொறட்டுவை பல்கலைக்கழகம்), லோகிதா, லோகிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை
செல்லிடப்பேசி: +94775343656

அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் சார்பில் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளி, மே 25, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள்(23.05.2018)புதன்கிழமையன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர்கொண்டு நிற்கின்றோம்.ஊருக்குள் தங்களுக்கென சுய கெளரவத்தை கொண்டவர்களாகவும் சைவசமயத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவர்களாகவும் விளங்கியதுடன் அய்யனார் ஆலயத்தை மிகவும் பக்தி சிரத்தையுடன் பரிபாலித்தும் வந்தவர்கள்.அன்னை திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமல்லாது சைவத்திற்கும் ஊர் மக்களுக்கும் கூட பேரிழப்பாகவே அமைந்து விட்டது.அன்னையின் இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னையின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

புதன், மே 16, 2018

மரண அறிவித்தல்!திரு,சின்னையா நடராஜா(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20.03.1930 இறையாக:10.05.2018
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நடராசா அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணி அம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரவீந்திரன்(கனடா), ரஜிகலா(பிரித்தானியா), யோகேந்திரன்(பிரித்தானியா), ரஜனி( Doha கட்டார்), பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜியகுமாரி(கனடா), கருணாகரன்(பிரித்தானியா), ராஜேஸ்வரி(பிரித்தானியா), அருள்ராஜ்(Doha கட்டார்), சர்மிளா(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதன், வைஷ்ணுவன், அபிரா, அபிசன், தஷன், ரிஷான், அஜித்தன், மிதூன், அஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலம்சென்றவர்களான குருசாமி(J.P), கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்), நாகம்மா ஆகியோரின் அன்புச் ககோதரரும், 

அரசரெட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), சிற்றம்பலம்(பிரித்தானியா), மகாலிங்கம்(கனடா), கோணேசலிங்கம்(இலங்கை), இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 19/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168883524
ராணி — கனடா
செல்லிடப்பேசி: +14167542853
கோணேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766385571
மகாலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14167290955
சிற்றம்பலம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086956133
அரசரெட்ணம் — இலங்கை
தொலைபேசி: +94212221739

புதன், மே 02, 2018

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா குமாரதாசன்(குமார்)


ஏழாலை மேற்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,துரையப்பா குமாரதாசன் அவர்கள் (30.04.2018) திங்கள் அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.அன்னார் ஆனந்தகெளரி(உதவிக்கல்விப்பணிப்பாளர் தீவகம்)யின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான துரையப்பா சரஸ்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,சிவநேசன்,குகதாசன்,திலகவதி(ஒய்வு பெற்ற ஆசிரியை)புனிதவதி ஆகியோரின் அன்புக்கினிய சகோதரரும்,கருணா(ஆசிரியை கார்மேல் பற்றிமா கல்லூரி கல்முனை)மாலா,செல்வரத்தினம்,ஜெயச்சந்திரன்,மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று(02.05.2018) காலை 10:00 மணியளவில் ஏழாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று சத்தியோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
மனைவி யாழ்ப்பாணம்-0094779364397

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பாக்கியம் திருநாவுக்கரசு(நயினாதீவு-கொழும்பு)

நயினாதீவை சொந்த இடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருத்துவரும் சட்டவாளருமான திருவாளர் தியாகர் திருநாவுக்கரசு அவர்களின் துணைவியார் பாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் இன்றைய தினம்(22.04.2018)காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரை ஏற்படுத்தியது.அம்மாவின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் இன்றும் கண்களினுள் நிழலாடுகின்றது.ஊர் பேச்சு வழக்கும் எளிமையான வாழ்க்கை முறையும் என்னை வியக்க வைத்திருக்கிறது.ஒரு பண்பான குடும்பம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் பாக்கியம் அம்மா அவர்கள்.அப்பு,ராசா என்று அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் ஒரு முறை அப்படி அழைக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு அம்மாவின் வார்த்தைகளில் அன்பு பொங்கும்.எமக்கு பாக்கியம் அம்மாவின் இழப்பு பேரிழப்பாகவே அமைந்திருக்கிறதென்றால் அவரது குடும்பத்தாருக்கு இது மாபெரும் இழப்பாகவே அமைந்திருக்கும் என்பது மிகவும் துயரான ஒன்றே.எல்லாவகைகளிலும் மருத்துவரும் சட்டவாளருமான ஐயாவிற்கு பக்க பலமாக இருந்து செயற்பட்டவர் பாக்கியம் அம்மா.இந்த இழப்பால் தவித்திருக்கும் ஐயாவிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அம்மாவின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற அவர்களின் குலதெய்வமாகிய நயினை நாகம்மையை பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

தொடர்புகளுக்கு:

கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777588721

தியாகராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411443849

சிவநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794853273

அலெக்ஸாண்டர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917634614030

சுரேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447975573148

சுபோதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772186665

செம்மனச்செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776736833

ஜீவமணி — டென்மார்க்
தொலைபேசி: +4528830893