ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

மரண அறிவித்தல்!திருவாளர்,சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம்(புளியங்கூடல்)

தந்தையாய்: 24.06.1942 — தெய்வமாய்: 13.04.2013
புளிங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 13-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், நளாயினி(செல்லா- கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தகப்பனும், முத்துக்கிருஸ்ணன் தயாளன், வீரசிங்கம் விஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கோணேஸ்வரன், மகேஸ்வரன், சுமதி, கோமதி, ஸ்ரீமதி, ஞானேஸ்வரன் ஆகியோரின் பெரியப்பாவும், செந்தமிழ் செல்வன், உமாதேவி, அருட்செல்வன், ஸ்ரீதேவி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, ஞானசம்பந்தன் காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கேதீஸ்வரன் அவர்களின் சகலனும், தேனுஷா, கவிஷா, அபிஷா, டிலக்ஷா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:முத்துக்கிருஷ்ணன் தயாளன்(மருமகன்)
தொடர்புகளுக்கு:
கனடா தொலைபேசி: +14162989913
இலங்கை செல்லிடப்பேசி: +94774086781

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக