திங்கள், ஏப்ரல் 15, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னுச்சாமி சோதிநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சோதிநாதன் அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும், கனுஜா(கனடா), நிருஷா, நிருஷன்(N.K.V. றேடிங் கம்பனி பொரளை- உரிமையாளர்), நிதர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகரன்(கனடா), அருச்சுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மனோன்மணி, காலஞ்சென்ற நவரத்தினம், மற்றும் திலகவதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, விசுவலிங்கம், நாகராஜா, அருந்ததி, மற்றும் கமலாதேவி, சந்திரபாலா(லட்சுமி காகிதாதி- உரிமையாளர்), குமரகுருபரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவம் அவர்களின் சகலனும், விஜயலட்சுமி, ரோகினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும், அபிநயா, சபிந்தன், அர்ச்சயா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
பின்னர் தகனக்கிரியைகளுக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு.
இலங்கை:தொலைபேசி: +94214911878
சசிகரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14166999556 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக