சனி, ஏப்ரல் 20, 2013

மரண அறிவித்தல்!திருமதி,நடராசா நீலாம்பாள்(புளியங்கூடல்)

மலர்வு : 09.10.1926 — உதிர்வு : 19.04.2013
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நீலாம்பாள் 19-04-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்து விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னப்பு சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னப்பு நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், ஞானேஸ்வரி(பிரான்ஸ்), சிறீதரன்(கனடா), சிறீரஞ்சன்(சுங்கயிலாகா உத்தியோகத்தர் கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், தனபாலசிங்கம்(பிரான்ஸ்-வேலணை ப.நோ.கூ சங்கம்), வாசுகி(கனடா), காலஞ்சென்ற குணநிதி, கலைமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, தர்மலிங்கம்(ஆசிரியர்), சத்யபாமா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு(K.G இன்டஸ்ரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கணேஷ், செல்லம்மா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தியாகராஜா(கிராம சேவையாளர்), மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி(சரவணை), திரு.திருமதி துரைச்சாமி, இந்திரபூபதி(கனடா), திரு.திருமதி வரதராஜன் புஷ்பமணி(கனடா), திரு.திருமதி நாராயணசாமி சிவசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சம்மந்தியும், மயூரன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), உத்தமி(பிரான்ஸ்), அனிதா(கனடா), ரஜிதா(கனடா), அனோஜா(கனடா), வினோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-04-2013 சனிக்கிழமை அன்று கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை புளியங்கூடலில் உள்ள அவர்களது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 22-04-2013 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதி கிரியைகள் நடைபெற்று, பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சோ.தனபாலசிங்கம் — பிரான்ஸ் தொலைபேசி: +33142623071
செல்லிடப்பேசி: +33651449541

இலங்கை செல்லிடப்பேசி: +94777377384

சிறீ — கனடா தொலைபேசி: +14167495532

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக