சனி, அக்டோபர் 15, 2016

மரண அறிவித்தல்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(புளியங்கூடல்)

பரிவாக:29.05.1954-பிரிவாக:13.10.2016
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாயகம் தம்பதிகளின் மருமகனும், செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், நிருதரன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மருதடியான், கருநாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜிவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை (16-10-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331

வெள்ளி, அக்டோபர் 14, 2016

கண்ணீர் அஞ்சலிகள்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(13.10.2016)வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்று துன்பம் அடைந்து நிற்கின்றோம்.
மூர்த்தி அண்ணா அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.வெள்ளை நிற ஆடைகளையே எப்பொழுதும் அவர் அணிந்திருப்பார்.அவரின் உள்ளமும் அப்படித்தான் பசுமையாகவே இருந்தது.அவரது பெற்றோர் கொண்டிருந்த எளிமை,பண்பு,கொடை என்பவற்றை மூர்த்தி அண்ணாவும் தாங்கியே நடந்தார்.அவரிடத்தில் கோபம் என்பதை காண முடியாது,அவரது புன்னகை வதனத்தை எப்பவுமே மறக்க முடியாது!
மூர்த்தி அண்ணாவின் இழப்பால் கண்ணீரில் உழலும் ஊர் உறவுகளுடன் புலம்பெயர்ந்து வாழும் நாமும் கண்ணீரை பகிர்ந்து கொள்கின்றோம்.
அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வியாழன், அக்டோபர் 06, 2016

மரண அறிவித்தல்!திருமதி மங்கையற்கரசி பூலோகம்

வரவு:27-09-1933 விரைவு:02-10-2016
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி(சரசு) பூலோகம் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகளும், பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, வெற்றிவேலு, இலட்சுமி, மற்றும் விசுவலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கண்மணி, பத்மாவதி, காலஞ்சென்ற இலட்சுமணப்பிள்ளை, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம், மற்றும் முருகேசபிள்ளை, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு தயாளன்(மகன்) — கனடா தொலைபேசி: +14163212952 ஜெயசீலன்(மகன்) — கனடா தொலைபேசி: +16474066914
சீராளன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94771726644
செல்லிடப்பேசி: +94750716886
இராஜராஜன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14167266317 சிவசோதி(பெறாமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14168793767 

ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

எம் இதய அஞ்சலிகள்!திரு,கதிர்காமர் சண்முகரத்தினம்

நெடுந்தீவில் பிறந்து வளர்ந்து நாரந்தனையை வாழ்விடமாகக் கொண்டு தற்காலிகமாக கச்சேரியடியில் வாழ்ந்து வந்த திரு,கதிர்காமர் சண்முகரத்தினம் அவர்கள் கடந்த 07-09-2016 அன்று எம்மிடையே இருந்து பிரிந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொணா துயரடைந்து நிற்கின்றோம்.புன்னகையாலே அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவராக,மென்மையாகப் பேசும் பண்பு கொண்டவராக,நிதானமான செயற்பாடு கொண்டவராக இம்மண்ணிலே வாழ்ந்தவர்.நல்லொழுக்கம் என்பதற்கு இவரையே ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்,அத்தகைய ஒரு நல்ல பொக்கிஷமாக வாழ்ந்தவர் எம் அன்புக்கினிய மாமனார் திரு,கதிர்காமர் சண்முகரத்தினம் அவர்கள்.அன்னாரது இழப்பால் துயர் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் இதய அஞ்சலிகளை காணிக்கை ஆக்கி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

திங்கள், ஆகஸ்ட் 15, 2016

மரண அறிவித்தல்!திருமதி,பூபதி கந்தையா(புளியங்கூடல்)

வரவு:13.06.1932-விரைவு:14.08.2016
யாழ்.புளியங்கூடல் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பூபதி கந்தையா அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(Contractor) அவர்களின் அன்பு மனைவியும், உமாதேவி, சித்திராதேவி(இந்தியா), ஈஸ்வரி, விக்னேஸ்வரன், வாமன், கணேஸ்வரி, இளமுருகன், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான கற்பகம், அன்னமுத்து, கந்தையா, கனகரெத்தினம், மற்றும் துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்மதுரை, காலஞ்சென்ற நல்லநாதன், அற்புதராசா, ஜெயந்தி, கலைவாணி, பேரின்பநாதன், நிஷாந்தி, சிவமதி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான ராசம்மா, கந்தப்பு, அன்னம்மா, தெய்வானை, சோமசுந்தரம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தேவிகா சுதாகரன், வனஜா சுபாஸ்கரன், அமுதன் கார்த்திகா, காலஞ்சென்ற அரிகரன், வாகீசன் கார்த்திகா, அகிலன், சஞ்சீவன், பிரதுஷா, அகல்யா, அனிஜா, பிரியங்கா, துளசிகா, கார்த்திகேயன், சரண்யா நியுந்தன், சாருகா, கேஷன், கேஷிகா, ஹரிசன், சிவஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அச்சுதன், உமாசுதன், சங்கவி, அக்‌ஷரன், அக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பார்வைக்கு திகதி:
செவ்வாய்க்கிழமை 16/08/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
hapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு திகதி:
புதன்கிழமை 17/08/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை திகதி:
புதன்கிழமை 17/08/2016, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம் திகதி:
புதன்கிழமை 17/08/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave,
Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு - — கனடா தொலைபேசி: +14166091626 -
இந்தியா தொலைபேசி: +914314050810 -
கனடா தொலைபேசி: +16472858064
செல்லிடப்பேசி: +14167253396 

புதன், ஆகஸ்ட் 03, 2016

மரண அறிவித்தல்!திரு,கந்தையா தர்மலிங்கம்(புளியங்கூடல்)

மண்ணகம்: 14-02-1945 — விண்ணகம்:01-08-2016
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தர்மலிங்கம்(தர்மு)அவர்கள் (01-08-2016) திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இரத்தினபூபதி(பூபதி) அவர்களின் பாசமிகு கணவரும், ஜெகதீஸ்வரன்(ஜெகன்- கனடா), ஜெகதா(இலங்கை), ஐங்கரன்(சுவிஸ்), ஜெகதினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், நிஷாந்தினி(கனடா)பாலச்சந்திரன்(பாலன்- சேவிஸ் ஸ்டேசன்) ரஜிதா(சுவிஸ்)சதீஸ்குமார்(றிக்கோ ஐஸ்கிரீம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்
வரதராசா(சின்ராசு)பாலசிங்கம்(பாலு)கனகேஸ்வரி(கண்ணம்மா)தில்லைச்சிவம், தனேஸ்வரி(கிளி)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விஜயலக்சுமி, இராஜேஸ்வரி,காலஞ்சென்ற தேவராசா,வசந்தகுமாரி, ஸ்ரீஸ்கந்தராசா, அன்னலட்சுமி,நவரத்தினம், விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜானுஜா(கனடா)ஜனோஜன்(கனடா)கிஷான்(கனடா)டிலக்ஸனா, பிரவிந், லஜந்தன், சஜிதன்(சுவிஸ்)கஸ்விகா(சுவிஸ்)இஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை (04-08-2016) வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில்-புளியங்கூடல் இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
ஜெகன் — கனடா தொலைபேசி: +14169993613
ஐங்கரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41793441698
ஜெகதா — இலங்கை செல்லிடப்பேசி: +94766255022
ஜெகதினி — இலங்கை செல்லிடப்பேசி: +94784996208